For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்தித்துக் கொண்ட துருவங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இரு துருவங்களா, இரு வேறு அணிகளில் இருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் திருமண நிகழ்ச்சியொன்றில்சந்தித்து, மனம் விட்டுப் பேசினர்.

சென்னை புரசைவாக்கம் தொகுதி தமாகா சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனின் மகன் வினோத் குமார். இவர் அமெரிக்காவில் என்ஜினியராக உள்ளார்.இவருக்கும் கோவையைச் சேர்ந்த கோவிந்தராஜூலு நாயுடு மகள் கீதாவுக்கும் வெள்ளிக்கிழமை காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மைஹாலில் திருமணம் நடந்தது.

திருமணத்தில் முதலமைச்சர் கருணாநிதி, த.மா.கா.தலைவர் மூப்பனார், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர்கலந்து கொண்டனர்.

முதல்வர் கருணாநிதியும், தமாகா தலைவர் மூப்பனாரும் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். சின்ன இடைவெளியில் அமர்ந்திருந்த இருவரையும்,அருகருகே அமரவைத்து நட்பை வலுப்படுத்தினார் ப.சிதம்பரம்.

காத்துக் கிடந்த போட்டோகிராபர்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது போலாகி விட்டது. போட்டோவை எடுத்துத் தள்ளினார்கள். இருவரும் சுமார் 30நிமிடம் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

தமாகா தொண்டர்களுக்கும், திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கும் இவர்களின் சந்திப்பும், அதனால் ஏற்பட்ட குஷியும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக வுடன் கூட்டணி, 3 வது அணி என்று தமாகா பற்றிப் பரவலாகக் கருத்து நிலவும் இந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதியும், மூப்பனாரும் சந்தித்துப்பேசியது அரசியலில் முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மூப்பனாரிடம் நிருபர்கள் கேட்டபோது வழக்கம் போல, நாங்கள்அரசியல் பேசவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X