நெடுமாறனுடன் பெங்களூர் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுதலை குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பெங்களூர்தமிழ்ச் சங்க பிரதிநிதிகளிடம் நெடுமாறன் உறுதியளித்தார்.
தமிழ் சான்றோர் பேரவையின் சார்பில் தமிழக பெருவிழா நெல்லையில் இரண்டு நாள்நடந்தது. இதில் பெங்களூர் தமிழ்ச் சங்கதலைவர் க.சுப்ரமணியன்,செயலாளர்இராசு.மாறன், துணை செயலாளர் கோ.வி. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை சந்த்தித்துப் பேசினர்அப்போது ராஜ்குமார் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகாவில்வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பற்றியும் எடுத்துக் கூறினர்.
நெடுமாறன் அவர்களிடம்,விரைவில் ராஜ்குமார் விடுதலை பற்றிய நல்ல செய்திவிரைவில் வரும். கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் வாழும்கன்னடர்கள் நட்புறவை கருதியே நான் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளேன்.
நான் மனித நேய அடிப்படையில்தான் சென்றேன். எந்த அரசின் தூதராகவும்செல்லவில்லை. ராஜ்குமார் நலமாக இருக்கிறார் வீரப்பன் கூட்டாளிகள் அவரை நல்லமுறையில் கவனித்துக் கொள்கிறார்கள்.
கர்நாடக தமிழர்கள் எந்த வித அச்சத்திற்கும் ஆளாக வேண்டாம். கர்நாடக அரசுதமிழர்களுக்கு நல்ல பாதுகாப்பு அளித்து வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தபபடும் என கூறினார்.












Click it and Unblock the Notifications