தென்னிந்திய தேயிலைக்கு ஏன் மார்க்கெட் இல்லை?
கோயம்பத்தூர்:
தென்னிந்திய தேயிலையின் விலை அதிகமாக இருப்பதால், இந்திய தேயிலைமார்க்கெட்டிலஸ், இலங்கை, கென்யா மற்றும் வட கிழக்கு மாநில தேயிலையின்ஆதிக்கம் அதிகம் இருப்பதாக மத்திய தேயிலை வாரியத்தின் பிராந்தியத் தலைவர்விக்ரம் கபூர் கூறியுள்ளார்.
குன்னூரில், தென்னிந்திய ஒருங்கிணைந்த தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்சார்பில், தென்னிந்திய தேயிலையின் தரத்தை உயர்த்துவது பற்றிய மாநாடு நடந்தது.
அதை துவக்கி வைத்து விக்ரம் கபூர் பேசினார். அவர் பேசியதாவது:
இந்திய சந்தையில், இலங்கை. கென்யா மற்றும் வடகிழக்கு மாநிலங்களே ஆட்சிசெலுத்தி வருகின்றன. ஏனென்றால் தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் அதிகவிலை கொடுக்கும் சந்தையையே நம்பி இருக்கிறார்கள். பல வருடங்களாக மற்றசந்தைகளை புறக்கணித்து வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டிருப்பது உற்பத்திப் பொருட்களின் தரம்தான். மேலும் கடந்தஇரண்டு ஆண்டுகளாக உற்பத்திப் பொருட்களின் பொது ஏலத்தின் போது விலைமிகவும் குறைந்த காரணத்தால் தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் வேறுவிதமான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்களதுபொருளை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை.
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த தேயிலை உற்பத்தியில் , கால் பகுதி மட்டுமேதமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உற்பத்தியாகிறது. இதில் பாதி ஏற்றுமதிசெய்யப்படுகிறது. எஞ்சியிருக்கும் தேயிலை குன்னுரிலும், கோயம்பத்தூரிலும் ஏலம்விடப்படுகிறது.
போட்டி என்ற பெயரில் தேயிலை தொழில் நலிவடைந்து வருகிறது. அனைத்துஉற்பத்தியாளர்களும் சர்வதேச வர்த்தக கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்மூலம் தரத்தை உயர்த்தி போட்டிகளை சமாளித்து உற்பத்தியை பெருக்க வேண்டும எனகூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications