கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.. கத்தோலிக்க சங்கம் வருத்தம்
திருச்சி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின், நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் மேல் தாக்குதல் நடத்தப்படுவதுஅதிகரித்து வருகிறது என்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய கத்தோலிக்க சம்மேளனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளனத் தலைவர் டாக்டர் ஆரோக்கியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன், கிறிஸ்தவ மதம், இந்தியமயமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவரது கருத்துதனி மனித மத சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக உள்ளது.
இவ்விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க்பரிவார் இயக்கங்கள் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில், வன்னிய கிறிஸ்தவர்களைமிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications