For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது கடத்திய 5 நைஜீரியர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல் நாட்டு மதுவை கடத்தியதற்காக 5 நைஜீரியர்கள்கைது செய்யப்பட்டனர்.

5 பேரும் நைஜீரியாவிலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்கள். சென்னை கிழக்குப்போலீஸார் அமைத்த சிறப்புப் படையிடம் இவர்கள் சிக்கினர்.

சிறப்புப் படை போலீஸ் நடத்தி வேட்டையில், ராபர்ட், ஜெரால், பெர்டினான்ட் என்கிறஓபோ மற்றும் பால் ஆகிய 5 நைஜீரிய மாணவர்களும், அவர்களுக்கு மது விற்கஉதவிய ஒரு பெண்ணும் சிக்கினர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல் நாட்டுமதுவை விற்று தங்கள் படிப்புச் செலவை சமாளித்து வருவதாக கூறினர்.நைஜீரியாவில் உள்ள ராணுவ அரசு அயல் நாட்டில் படிக்கும் மாணவர்களுக்குகொடுத்த வந்த உதவித் தொகையை நிறுத்தி விட்டதால் தாங்கள் இந்த செயலில்ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

சென்னையிலும் மற்றும தமிழகத்தில் உள்ள வேறு பல பல்கலைக்கழகங்களிலும்ஏராளமான நைஜீரிய மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X