ராஜ்குமார் - 100: "தமிழகமே கதி
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகம், முழுக்க, முழுக்கதமிழகத்தையே சார்ந்திருக்கிறது என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களாகி விட்டன. இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் சேர்ந்துசெயல்படுகின்றன. ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகத்துடன், தமிழகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.
இரு மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்கெடதாவாறு அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராஜ்குமாரை எவ்வித ஆபத்துமின்றி மீட்பதே கர்நாடக அரசின் முக்கியக் குறிக்கோளாகும். ராஜ்குமாரின்குடும்பத்தார் பேச்சுவார்த்தை மூலம் வீரப்பனின் மனதை மாற்றி, ராஜ்குமாரை மீட்டு வருவதையேவிரும்புகிறார்கள் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ராஜ்குமாரைமீட்கும் விஷயத்தில் தூதர்கள் குழு எப்போது மீண்டும் காட்டுக்குச் செல்லும் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி, தூதர்கள் குழுவுடன், நடிகர் ராஜ்குமார் விவகாரம் குறித்து விவாதித்து வருகிறார்.ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகம், தமிழகத்தையே நம்பியிருக்கிறது.
தன்னை அரசுத் தூதராக அங்கீகாரம் செய்தால்தான் அடுத்த முறை காட்டுக்குச் செல்வேன் என்று நெடுமாறன்கூறியிருப்பது பற்றி கேட்டபோது, அதுகுறித்து கர்நாடகத்திற்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications