இன்சாட்-2பி தொடர்பு துண்டிப்பு
பெங்களூர்:
இன்சாட்-2பி செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்பட்டுவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் செயற்கைக் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான தொடர்புதுண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் இணைப்புகிடைத்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மீண்டும் இணைப்புதுண்டிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழக செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில்,செயற்கைக் கோள் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டது. அதை மீண்டும் பெறமுயற்சித்து வருகிறோம்.
செயற்கைக் கோள் கட்டுப்பாடு மீண்டும் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இருப்பினும்விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே இந்தசெயற்கைக் கோளின் ஆயுள் காலம் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.
7 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்டது இன்சாட் -2பி. தூர்தர்ஷன் மற்றும்வி.எஸ்.என்.எல். ஆகியவை இன்சாட்-2பி மூலம் பயன் பெற்று வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.