இந்தியா வந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
மும்பை:
இந்தியாவில் 41 நாள் கிரிக்கெட் பயணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி திங்கள்கிழமை மும்பை வந்து சேர்ந்தது.
அணி வந்து சேர்ந்தாலும் அவர்களது கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக்கும், அணி வீரர்களின் உடமைகளும் இன்னும் வந்து சேரவில்லை. ஸ்ட்ரீக் லண்டனில் உள்ளார்.வீரர்களின் உடமைகளும் அங்கேயே உள்ளன. அவர்களது உடைமைகள் லண்டனிலிருந்து நேரடியாக போட்டி நடக்கும் ஸ்டேடியத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
நவம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை இந்தூரில் 3 நாள் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்டன் ஸ்ட்ரீக்சேர்ந்து கொள்வார்.
ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹேத் ஸ்ட்ரீக் இரண்டாவது நாள் ஆட்டத்தில் கலந்து கொள்வார். அவர் இன்னும் இந்தியா வரவில்லை. அணியிலுள்ள பிரெயின்மார்பி என்ற வீரருக்குப் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடந்து வருவதால் அவர் நவம்பர் 18 ம் தேதி டெல்லியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில்கலந்து கொள்வார்.
அணியின் கோச் கார்ல் ராக்கிமேன் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications