தூதர்கள் போவதால் பலன் இல்லை.. தமிழ்த் தீவிரவாதி
தூத்துக்குடி:
எத்தனை தூதுக்குழு சென்றாலும் எங்களை விடுவித்த பிறகுதான் நடிகர் ராஜ்குமாருக்குவிடுதலை கிடைக்கும் என தமிழ் தீவிரவாதி பொன்னிவளவன் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுதூத்துக்குடி சிறையில் இருக்கும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தமிழ்தீவிரவாதி பொன்னி வளவன், அந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முதலாவதுமாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு திங்கள் கிழமையன்று கொண்டு வரப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு வெளியே வந்த பொன்னி வளவனிடம் தீவிரவாதிகள் 5 பேரும்விடுவிக்கப்படாமல் உள்ளீர்களே, இந்த நிலையில் ராஜ்குமாரை வீரப்பன்விட்டுவிடுவாரா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பொன்னி வளவன், வீரப்பன் தனது கோரிக்கையில் தெளிவாக உள்ளார். அவர்ஏற்கனவே தெரிவித்தபடி, நான், மணிகண்டன், சத்யமூர்த்தி, வெங்கடேசன்,முத்துக்குமார் ஆகிய 5 பேரும் விடுவிக்கப்பட்டால்தான் ராஜ்குமாரை விடுவார்.
எத்தனை தூதுவர்கள் சென்றாலும் வீரப்பன் தான் எடுத்த முடிவில் உறுதியாகஇருக்கிறார் என்று பொன்னி வளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications