ராஜ்குமாரை மீட்கத் துடிக்கும் அதிரடிப் படையினர்
அந்தியூர் காடு:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை எங்களால் தான் மீட்க முடியும் எனஅதிரடிப்படையினர் கூறுகின்றனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. இரு மாநில அரசுகளும் தொடர்ந்துதூதுவர்களை அனுப்பியும் இன்னும் மீட்க முடியவிலலை.
அதிரடிப்படையினர் நெருக்கடி இல்லாததால் வீரப்பன் சர்வ சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறான்.
முன்பு வீரப்பனைப் பிடிக்க இரு மாநில அரசுகளும் அதிரடிப்படையினரைக் குவித்தனர். கர்நாடகஅதிரடிப்படையினர் மாதேஸ்வரன் மலை, புளிஞ்சூர், திம்பம் மலைப்பகுதிகளிலும்
தமிழக அதிரடிப்படையினர் ஆசனூர், பர்கூர், தட்டக்கரை, பண்ணாரி, மேட்டூர், தட்டக்கரை, அந்தியூர், பவானிஉட்பட பல இடங்களில் தங்கி வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இப்போது ராஜ்குமாரை மீட்கும் வரையில் அதிரடிப்படையினர் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனஇவர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கோவை சிறுகையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த டி.எஸ்.பி.சிதம்பரநாதன் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது டி.ஜி.பியாக இருந்த தேவராம், சஞ்சாய் அரோரா ஆகியோர்காட்டை முற்றுகையிட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வீரப்பன் போலீசாரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், கடத்திச் சென்றவர்களை விட்டு விட்டு ஓடிவிட்டான். இதே போல நெற்றிக்கண் ஆசிரியர் மணி மற்றும் வக்கீல் கிருஷ்ணர்த்தி ஆகியோரை வீரப்பனிடமிருந்துஅதிரடிப் படையினரே நள்ளிரவில் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.
எனவே அதிரடிப்படையினர் ராஜ்குமாரை மீட்க இப்போதும் தயார் எனக் கூறி வருகின்றனர். இரு மாநிலஅரசுகளும் தூதுவர்களை நம்பும் அளவிற்கு எங்களை நம்ப மறுக்கின்றனர். எங்கள் கைகள் கட்டப்பட்டு விட்டனஎன அதிரடிப்படையினர் குமுறுகின்றனர்.
அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்தால், வீரப்பன் தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராஜ்குமாரை விட்டுவிட்டுப் போக வாய்ப்பு உள்ளது எனக் கூறுகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications