ஜம்மு-காஷ்மீரில் இந்த வருடம் 2,200 பேர் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 2,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 60 சதவிகிதம் பேர் தீவிரவாதிகள் என அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இதுவரையிலான 10 மாதங்களில் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும் அவர்களை தேடும் பணியிலும் 2, 200 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
இவற்றில் 60 சதவிகிதம் பேர் தீவிரவாதிகள் என அரசின் செய்தித் தொடர்பாளர் புதன் கிழமையன்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதம் முதல் 1,306 தீவிரவாதிகளும், 596 பொது மக்களும், 319 ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுளில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
1994-ம் ஆண்டு முதல் இதுவரை 1,600 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.
இந்தஆண்டு தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவத்தினர் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.
1990-ம் ஆண்டு 550 பேரும், 1991-ம் ஆண்டு 844 பேரும், 1992-ம் ஆண்டு 819 பேரும், 1993-ம் ஆண்டு 1,310 பேரும், 1995-ம் ஆண்டு1,332 பேரும், 1996-ம் ஆண்டு 1.209 பேரும், 1997-ம் ஆண்டு 1.075 பேரும், 1998-ம் ஆண்டு 999 பேரும், 1999-ம் ஆண்டு 1,082தீவிரவாதிகளும் கொல்லப் பட்டுள்ளனர்.
பொது மக்கள் தீவிரவாதிகளின் வன்முறையால் வெறுப்படைந்து தீவிரவாதிகள் பற்றி முக்கியமான தகவல்களை ராணுவத்தினருக்கு அளித்து நல்லஒத்துழைப்பு நல்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 363 பேர் அயல் நாட்டவர்கள்.
பாதுகாப்பு படையினர் அயல் நாட்டு தீவிரவாதிகளை அடக்குவதில் வெற்றி கண்டிருப்பது சமீப காலத்தில் அதிகமான அளவில் அயல்நாட்டு தீவிரவாதிகள்கொல்லப் பட்டிருப்பதிலிருந்தே தெரியவரும்.
ஆனாலும் தீவிரவாதிகள் அதிகமான அளவில் வெடி பொருள்கள் வைத்திருப்பதாக தெரிய வருவது கவலைக்குரியது.
இதுவரை பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளிடமிருந்து 662 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தையும், 1,300 கிலோ வெடிமருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு தீவிரவாதிகளுக்கு ஒரு வீரர் என்ற முறையில் பாதுகாப்புப் படையினர்கொல்லபட்டிருக்கிறார். இது 1:8 என்ற விகிதத்தில் 1990-களில் இருந்தது.
இந்த ஆண்டு இதுவரை 319 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். சென்ற ஆண்டு முழுவதும் 356 வீரர்கள் கொல்லப்பட்டனர். 1994-ம்ஆண்டு 1,596 தீவிரவாதிகளும் 198 வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.