கருணாநிதிக்கு நன்றி கூறுகிறார் ஜோதிபாசு
சென்னை:
என்னைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை மதித்துப் போற்றுகிறேன் என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர்ஜோதி பாசு, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் 24 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து சரித்திரம் படைத்துள்ள மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு, சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
அதையொட்டி முரசொலியில் முதல்வர் கருணாநிதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஜோதிபாசுவின் நேர்மையைப் பாராட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து ஜோதிபாசு எழுதியுள்ள கடிதத்தில், ஜோதி பாசு, மாற்று அணியில் இருந்தாலும் மார்க்சிஸ்ட் ஆட்சியின் நேர்மையை அவர் மனம்திறந்து பாராட்டியிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு, ஜோதிபாசு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தாங்கள் என்னைப்பற்றி முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். அக்கட்டுரையில் என்னைப்பற்றி தாங்கள் வெளிப்படுத்தியுள்ளஉணர்வுகளை பெரிதும் மதிக்கிறேன்.
தங்கள் மருமகன் முரசொலி மாறனை நான் நீண்டகாலமாக அறிவேன். அவர் அண்மையில் நோய்வாய்ப்பட்டிருப்பது அறிந்து வருந்துகிறேன். அவர் விரைவில்நலம் பெற வாழ்த்துகிறேன் என்று ஜோதிபாசு குறிப்பிட்டுள்ளார்.