34 வது செஸ் ஒலிம்பியாட்: 9 வது சுற்றில் இந்திய அணி வெற்றி
இஸ்தான்புல்:
இஸ்தான்புல் நகரில் 34 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ஆரம்பம்முதலே பின்தங்கி இருந்தனர்.
எனினும் 9 வது சுற்று முதல் இந்திய ஆண்கள் அணி வெற்றியைக் குவிக்கத் தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை நடந்த 11 வது சுற்றுப் போட்டியில் பிரேசிலுடன் மோதிய இந்திய ஆண்கள் அணி 2-2 ன்ெற புள்ளிக்கணக்கில் டிரா செய்தது.
இதன்மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதனால் பட்டியல் வரிசையில் 14 முதல் 22 வது இடம் வரை இதே புள்ளிகள்பெற்றுள்ள நாடுகளுடன் இந்தியாவும் மோதும் வாய்ப்புக்கள் உள்ளது.
இந்திய பெண்கள் அணி 11 வது சுற்றில் லாட்வியர் அணியுடன் மோதியது. இதில் இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் பெண்கள் அணி மொத்தம் 18.5 புள்ளிகள் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications