விவசாயத்திற்கு கூடுதல் மின்சாரம்...அமைச்சர் தகவல்
சென்னை:
2001 ம் ஆண்டு கோடை காலத்தில் விவசாயத்திற்கு தினமும் 6 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் மின்வாரிய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில், தமிழக மின்வாரியம் தற்போது நஷ்டத்தில் உள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதும், 15 லட்சம் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதும், 30 லட்சம் குடும்பத்தினுக்கு ரூ 2.50 க்குமின்சாரத்தை வாங்கி 75 காசுக்கு கொடுப்பதும் தான் நஷ்டத்திற்கு காரணம்.
மின்வாரியத் தலைவர் பூரணலிங்கம் எடுத்த நடவடிக்கை காரணமாக நஷ்டம் ஓரளவு குறைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேலும்900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தற்போது கோடைகாலத்தில் விவசாயத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இனி 2001 ம் ஆண்டு முதல் கோடை காலத்தில் 6 மணிநேரம் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படும். அடுத்த ஆண்டில் தமிழகத்தில் தரமான மின்சாரத்தை தருவோம் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications