காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியான போனகன்ட் தோரா பகுதியில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில்துணை கமாண்டன்ட் மற்றும் இந்திய-திபெத்திய எல்லைப் போலீஸார் இருவர் அடங்குவர்.

அனந்தநாக் மாவட்டம் போனகன்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இச்சம்பவத்தில் க்ளவரியு என்ற துணை கமாண்டன்ட் மற்றும் 2 போலீஸார் கொல்லப்பட்டார்.இவர்களில் ஒருவர் பெயர் லலித் சிங். இன்னொருவர் பெயர் தெரியவில்லை. 2 தீவிரவாதிகளும் இச்சம்பவத்தில் இறந்தனர்.

மேலும் இரண்டு அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற கையெறி குண்டுகளும், ஏகே 47ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

இதே போல் வடக்குக் காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள யூரி என்ற இடத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேதுப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களாக காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட தனியார்மற்றும் அரசு பள்ளிகள் சேதமடைந்துள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+