விபத்துக்களை குறைக்க மொபைல் விளக்குகள்
சென்னை:
தேசிய நெடுஞ் சாலைகளில் இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்துபோலீசாருக்கு நவீன விளக்குத் தடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ் சாலைகளில் வாகன ஓட்டிகள் கட்டுக் கடங்காத வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் பெருமளவுவிபத்துகள் நிழ்ந்து வருகின்றன.
இந்த விபத்துக்களை தவிர்த்து விபத்துகக்களை குறைப்பதற்காக போக்குவரத்து போலீசாருக்கு விளக்குத் தடிகளைதமிழக அரசு கொடுத்துள்ளது.
இவை தைவான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது 10 மொபைல் லைட்டுகள்வாங்கப்பட்டுள்ளன. ஒரு விளக்கின் விலை ரூ 1,400. இந்த விளக்கு சிக்னல் இல்லாத சந்திப்புகளில்உபயோகபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விளக்குகள் சாதாரண பேட்டரியில் இயங்குகின்றன. சென்னை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தாம்பரம்வரை இந்த விளக்குத் தடிகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த தடியில் இரண்டடி டியூப் லைட் வடிவில், சிவப்பு நிறவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லைட்டின் வெளிச்சம் 100 அடி தூரம் வரை பிரகாசமாக தெரிகிறது.
இந்த விளக்குகள் தைவான் ஹாங்காங் நாடுகளில் பயன் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் முதன் முதலாகதமிழகத்தில் தான் பயன் படுத்தப்படுகிறது. இந்த விளக்குகளை பயன்படுத்த துவங்கிய பின் விபத்துக்கள்குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications