கோபாலுக்கு வீரப்பனிடமிருந்து அழைப்பு இல்லை
சென்னை:
நெடுமாறன் தலைமையிலான குழு வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குப் புறப்பட்டு விட்ட நிலையில், நக்கீரன் கோபால் இன்னும்கிளம்பவில்லை.
நக்கீரன் கோபால்தான் முதலில் வீரப்பனைச் சந்தித்தவர். அதன் பிறகு அவருடன் நெடுமாறன் தலைமையிலான மூவர் குழுசேர்ந்து கொண்டது. கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க தற்போது மீண்டும் இக்குழுவினர் காட்டுக்குக் கிளம்பியுள்ளனர்.இருப்பினும் கோபால் இன்னும் கிளம்பவில்லை. வீரப்பனிடமிருந்து அவருக்கு இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை என்றுகூறப்படுகிறது.
வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்தவுடன் கோபால் காட்டுக்குச் செல்வார் என்று நக்கீரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெடுமாறன், புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் அடங்கிய குழு காட்டை சென்றடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோபாலுக்கு மட்டும் ஏன் வீரப்பன் இன்னும் அழைப்பு விடவில்லை என்பது குழப்பமாக இருக்கிறது. இருப்பினும் விரைவில்கோபால் காட்டுக்குக் கிளம்புவார் என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.