மது அருந்திய 2 பேர் மயங்கி விழுந்து சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள ஒயின்ஷாப்பில் மது அருந்திய 2 வியாபாரிகள் மயங்கி விழுந்துஇறந்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள் ஜலாலுதீன் (38), ஜமால் பாட்சா (60),முனியப்பன். மூன்று பேரும் நடைபாதைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.திருவல்லிக்கேணி வி.எம்.தெருவிலுள்ள ஒயின்ஷாப்புக்கு ஞாயிற்றுக்கிழமை மூன்றுபேரும் சென்றனர்.

அங்கு அவர்கள் மது அருந்தினர். குடித்த சில நிமிடங்களுக்குள் மூன்று பேருக்கும்வாந்தி வந்தது. மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக மயங்கி விழுந்தனர். கடைஅருகே நின்று கொண்டிருந்தவர்கள் அவர்களை ராயப்பேட்டையிலுள்ள அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் ஜலாலுதீனும், ஜமால் பாட்சாவும் இறந்தனர். இவர்களின் உடல்கள்மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டது. மற்றொருவரான முனியப்பன் உயிருக்குப் போராடிவருகிறார்.

இறந்த ஜலாலுதீனுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பிளாட்பாரத்தில்,வளையல் கடை நடத்தி வந்தார். போதையை அதிகரிக்க சில போதை மாத்திரைகளைஇவர்கள் மதுவில் கலந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மதுக்கடைக்கு அருகே சில மாத்திரைகளின் அட்டைகளையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+