மாஜி மனைவி வீட்டில் திருடிய போலீஸ்காரர்
சென்னை:
தன்னுடைய மாஜி மனைவி வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடிய போலீஸ் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் போலீஸ்காரர். இவரது மனைவி சாந்தி.இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கடந்த 1994 ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.
இதன்பிறகு, சாந்தி 1995 ம் ஆண்டு சந்திரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கச்சக்கட்டியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சாந்தியின் முதல் கணவர் ராமச்சந்திரன் திண்டுக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்றுதிண்டுக்கல்லில் இருந்து ஒரு டாடா சுமோ காரில் கச்சக்கட்டி கிராமத்திற்கு வந்தார்.
அப்போது சாந்தி, தனது 2 வது கணவருடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு பூட்டப் பட்டிருந்ததைக் கண்ட ராமச்சந்திரன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளேசென்றார்.
அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5 சவரன் நகை, ரூ 10,000 ஆகியவற்றைத் திருடிக் கொண்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.
இதுகுறித்து சாந்தி, வாடிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர்ராமச்சந்திரனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications