முன்பு பிச்சை .. இப்போது இனிப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒழுகரை நகராட்சியில் பணி புரியும் தற்காலிக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிர்வாகம்நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, நூதன முறையில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
தொடர்ந்து 12 வருடங்களாக நகராட்சி ஊழியர்களாகப் பணிபுரிந்து வரும் தங்களுக்கு பணி நிரந்தரம், பதவி உயர்வு போன்றவற்றை அளிக்கும் படிகோரிக்கை விடுத்து பாண்டிச்சேரியில், தெருக்களில் பிச்சை எடுத்து இந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.கடந்த முறை போராட்டம் நடத்தியபோது, போலீஸார் தடியடி நடத்தியதையும் அவர்கள் கண்டித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications