கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது
சிங்கப்பூர்:
ஆசிய நாடுகளுக்கு இந்த ஆண்டு இனிமேல் எண்ணெய் வழங்கப் போவதில்லைஎன்று எண்ணெய்உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதால், ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
பேரலுக்கு 34 டாலர்கள் என்ற அளவில் தற்போதைய விலை உள்ளது. நியூயார்க்பங்குச் சந்தை நிலவரப்படி, டிசம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெயின் விலைபேரலுக்கு 34.45 டாலர்கள் என்ற அளவில் இருந்தது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின்கூட்டமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில், இந்தஆண்டு இனிமேல், ஆசிய நாடுகளுக்குக் கூடுதல் கச்சா எண்ணெய் தரப்பட மாட்டாதுஎன்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் விலை உயர்ந்தது.
கூட்டத்தில் பேசிய கத்தார் எண்ணெய் அமைச்சர் அப்துல்லா அல் அத்தியாகூறுகையில், ஏற்கனவே கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இனிமேலும்அதை அதிகரிக்க முடியாது என்றார்.
யு.என்.ஐ.