விஜயலட்சுமிக்கு வெள்ளி
இஸ்தான்புல் (துருக்கி):
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த செஸ் ஓலிம்பிக் போட்டியில், இந்தியாவின்விஜயலட்சுமி சுப்பராமன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
செஸ் ஒலிம்பியாட் என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்தஒருவர் தனி நபர் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
மொத்தம் நடந்த 14 சுற்றுக்களில் விஜயலட்சுமிக்கு 11 புள்ளிகள் கிடைத்தன. இறுதிச்சுற்றில், 101-வது நகர்த்தலின்போது போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம்விஜயலட்சுமிக்கு வெள்ளி கிடைத்தது. அவருடன் மோதிய, லிதுவேனிய மங்கைவிக்டோரியா சிமிலட் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனைகள் இந்த ஒலிம்பியாட்டில் 14-வது இடத்தைப் பெற்றனர். ஆடவர்பிரிவில் இந்தியாவுக்கு 12-வது இடம் கிடைத்தது.
ஆடவர் பிரிவில் ரஷியா தங்கப் பதக்கம் வென்றது. மகளிர் பிரிவில் சீனாவுக்குத்தங்கம் கிடைத்தது.