For Daily Alerts
Just In
ஜம்முவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு:
ஜம்முவில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் திங்கள்கிழமை 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டம் பாதர்வா டெசில் அருகேயுள்ள பால்லா கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைநடந்தது.
இதில் தீவிரவாதி தாரிக் ஹூசேன் என்பவர் கொல்லப்பட்டார். இதையடுத்து பழிக்குப்பழி வாங்கும் முயற்சியில் இறங்கிய தீவிரவாதிகள், ராணுவ வீரர்களைநோக்கித் தாக்குதல் நடத்தினர்.
மேலும், பூஞ்ச் மாவட்டம் காலி பிண்டியில், ராணுவ வீரர்களும், போலீஸாரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
இதே போல் ராணுவ வீரர்கள் தாக்கியதில் தோடா மாவட்டம் பாட்வான்னில் ஒரு தீவிரவாதியும், சாச்சலில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, November 14, 2000, 5:30 [IST]