த.மா.கா.வின் தாழ்த்தப்பட்டோர் மாநாடு
சென்னை:
த.மா.கா. தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநில மாநாடு அடுத்த மாதம் சென்னையில்நடைபெறுகிறது. மூப்பனார், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து த.மா.கா.எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வள்ளல்பெருமான் அளித்த பேட்டி:
டிசம்பர் 11-ம் தேதி, எஸ்.சி., எஸ். டி.பிரிவின் மாநாடு சென்னை தேனாம்பேட்டைகாங்கிரஸ் மைதானத்தில் நடைபெறும்.
மாநாட்டை த.மா.கா. தலைவர் மூப்பனார் தொடங்கி வைக்கிறார். முன்னாள் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன் மற்றும் பலர்இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
வேலைவாய்ப்பு தொடர்பாக சட்டசபையில் முதல்வர் அறிவித்த வெள்ளை அறிக்கையில்எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்தும், தொழிற்கல்வி படித்தமாணவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் நேரடியாக வேலை வழங்க வேண்டும்என்பதை வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார் வள்ளல்பெருமான்.












Click it and Unblock the Notifications