For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை செய்ய கரை ஒதுங்கியதா திமிங்கலம்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாகப்பட்டினம் கடற்கரை அருகே புதைமணலில் சிக்கிய திமிங்கிலம் தற்கொலைசெய்யவே கரை ஒதுங்கியது என்று கடற்கரை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் கோடியக்கரை கடல் மணலில் சகதியில் ராட்சச திமிங்கிலம் ஒன்று சிக்கிஉள்ளது. இந்த திமிங்கிலம் கடந்த 3 மாதமாக மணலில் சிக்கி தவிக்கிறது. உயிருக்குபோராடும் இந்த திமிங்கிலத்தை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை.

திமிங்கிலத்தை கடற்படையினர் காப்பாற்ற வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்தவீரபாகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின்முன்பு ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி கடற்படையினர் அறிக்கைதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

அதன்படி கடற்படை அதிகாரிகள் திமிங்கிலம் இருக்கும் இடத்தை சோதனையிட்டுநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், திமிங்கிலத்தை கிரேன் மூலமாகஎடுத்து கடலில் விடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் அதன் அருகே யாரும்போக முடியவில்லை.

அந்த திமிங்கிலத்தின் உடலில் பலத்த காயம் ஏற்படடுள்ளது என்றும், அதனால் அதுதற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்தான் கடலில் ஒதுங்கியது என்றும்நிபுணர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும திமிங்கிலத்தை மீட்பது பற்றி ஆராய நிபுணர்களை அழைத்துள்ளோம்என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X