புளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார்
டல்ஹெளஸி (புளோரிடா):
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்த கை வாக்கு எண்ணிக்கையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்அல் கோரை விட 300 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும், அல்கோருக்கும் இடையே ஓட்டுக்கள் வித்தியாசம் மிகக் குறைவாகவேஇருந்தது. இதனால் 4 கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண வேண்டும் என்று அல்கோர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி யார் என்பது கேள்விக்குரியானது.
புளோரிடாவின் சில கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண மாநில தேர்தல் அலுவலகம் உத்தரவிட்டது. தற்போது கோரை விட புஷ் 300ஓட்டுக்கள் அதிகம் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் புளோரிடா முழுவதும் உள்ள 67 கவுன்டிகளில் நடந்த ஓட்டு எண்ணிக்கை குறித்தஇறுதி முடிவை மாநில தேர்தல் அதிகாரி கேத்தரின் ஹாரிஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடேயே, கைகளால் எண்ணப்படும் வாக்குகளின் விவரங்களை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்என்று ஹாரிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் வாக்கு எண்ணுவதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் என்று சில கவுன்டிகளைச் சேர்ந்தவர்கள் ஹாரிஸுக்குஎழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து வருவதாக ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
புளோரிடா மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவருக்கு 25 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைக்கும். இதைப் பெறுபவரேஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஆவார்.
பாம் பீச் மற்றும் மியாமி டாடே கவுன்டிகளின் சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கையால் எண்ணப்பட்டு வருகிறது. வொலூசியாவில் மறு வாக்குஎண்ணிக்கை முடிந்து விட்டது. இதில் கோருக்கு 98 ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.
வொலுசியாவில் புஷ்ஷூக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 492, அல்கோருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 192 ஆகும்
அல்கோரின் செய்தித் தொடர்பாளர் ஜென்னி பக்காஸ் கூறுகையில், தற்போது வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகின்றன. இயந்திரத்தால் எண்ணப்பட்டவாக்குகளை விட கோருக்கு கையால் எண்ணப்பட்டதில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றார்.
புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஹக்செஸ் கூறுகையில் வாக்குகள் மறு எண்ணிக்கையில் புஷ் தான் முன்னணியில் உள்ளார். அவர் தான் அமெரிக்காவின்அடுத்த ஜனாதிபதி. புளோரிடாவில் முதலில் வாக்குகள் எண்ணப்பட்டது. மீண்டும் கையால் வாக்குகள் எண்ணப்பட்டது. அவை புஷ்ஷூக்கு சாதகமாகவேஉள்ளது என்றார்.
கோர் கட்சியின் தேர்தல் மேலாளரும், முன்னாள் அமைச்சருமான வாரன் கிறிஸ்டோபர் கூறுகையில் கை வாக்கு எண்ணிக்கை துரிதமாக நடந்து வருகிறது.வாக்குகளை எண்ணுபவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications