காயத்தின் வலி பொறுக்காத ராணுவ வீரர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

அவுரங்காபாத்:

பஞ்சாப் மாநில எல்லையில் நடந்த சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர் வலி தாங்க முடியாமல் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவத்தின் 17-வது மராத்தா பிரிவைச் சேர்ந்த வீரர் பிரபாகர் விதோபா ஜீவ்ராக். வயது 35. இவர் பியூலாம்பரி தாலுக்கா ஜீவ்ராக்கிராமத்தைச் சேர்ந்தவர். ஜலந்தர் அருகே நடந்த ஒரு மோதலில் இவருடைய காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடமாடி வந்தார்.

இருந்தும் கால் வலி பொறுக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, புனேமருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்தார்.

வலி பொறுக்க முடியாமல் துடித்த அவர் மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திங்கள்கிழமை வெளியேறி வீட்டுக்கு வந்தார்.பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். 95 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமைபரிதாபமாக இறந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+