For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் புரட்சி வருமா? பிஜியில் பீதி

By Staff
Google Oneindia Tamil News

சுவா:

பிஜியில் புதிய புரட்சி வரும் என்ற வதந்தி பரவியதால் போலீஸ் மற்றும் ராணுவபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த புரட்சியால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திரசெளத்ரியின் ஆட்சி கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என பிஜி நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. இதனால் பிஜியில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிஜிமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செளத்ரி, மே புரட்சியில், ஜார்ஜ் ஸ்பைட்டால்நீக்கப்பட்டார். அவரும், அவரது அமைச்சர்களும் புரட்சிக்காரர்களால் கதுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சிறை வைக்கப்பட்டனர். 56 நாட்கள் கழித்துவிடுதலை செய்யப்பட்டனர். அத்ை தொடர்ந்து அங்கு இடைக்கால அமைச்சரவையும்அமைக்கப்பட்டது

இந்த புரட்சியை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஸ்பைட்தற்போது நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தலைநகர் சுவாவில்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், செளத்ரி ஆட்சியை நீக்கியது சட்டவிரோதமானது என்று புதன்கிழமைஉயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பிரதமர் லைசீனியா கொராசே, ராணுவம்அமைத்துள்ள இடைக்கால அரசு முறைப்படியானது தான் என கூறியுள்ளார். இதனால்பிஜியில் புதிய பிரச்னை எழுந்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் ராது காமீசி மாராவை மீண்டும் பாராளுமன்றத்தைகூட்டி பிரதமரை நியமிக்கும்படி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாராதற்போது நியூசிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர்ஞாயிற்றுக் கிழமை பிஜி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை செளத்ரி அளித்த பேட்டியில், மீண்டும் நான் பிரதமராவேன் எனநம்பிக்கை தெரிவித்திருந்தார்.ஆனால் பிஜியைச் சேர்ந்த சில பத்திரிகைகள்தெரிவிக்கையில், அவரது கட்சியினரே அவர் மீது நம்பிக்கையில்லாதீர்மானம்கொண்டு வருவார்கள் என தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X