For Daily Alerts
Just In
பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுகிறது தமிழ்ச் சங்கம்
சென்னை:
தமிழகம் வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு கறுப்புக் கொடி காட்ட தலைநகர் தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.
தலைநகர் தமிழ் சங்கத் தலைவர் சுந்தரராசன் வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு மொழி, இன பண்பாட்டு மக்களை ஒரு மொழியினராக ஒரே பண்பாடுடையவராக ஆக்க முயல்வதேசமஸ்கிருதத்தை திணிக்கும் நோக்கமாக அமைகிறது.
இந்திய அரசு இந்தி மொழி வளர்ச்சிக்கும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் பல கோடி ரூபாய்களை கொட்டிவளர்க்கிறது.
சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், தமிழ் உரிமைகளை மீண்டெடுத்தும், தமிழகம் வரும் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிக்கும், பிரதமர் வாஜ்பாய்க்கும் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Saturday, November 18, 2000, 5:30 [IST]