விப்ரோ, இன்போசிஸ் அதிபர்களுக்கு "இசட் பிரிவு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ராஜ்குமார் கடத்தலையடுத்து, இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையின் முடிசூடாமன்னர்களாக விளங்கும் "விப்ரோ நிறுவன உரிமையாளர் பிரேம்ஜி மற்றும்"இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி ஆகியோருக்கு "இசட் பிரிவுபாதுகாப்பு அளிக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் தங்களது முத்திரையைப் பதித்துள்ளநிறுவனங்கள், விப்ரோவும், இன்போசிசும். பிரேம்ஜி, இந்தியாவிலேயே மிகப் பெரியபணக்காரர். இந்தியாவின் நம்பர் ஒன் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ்.

உலக அளவில் முதன்மையான பங்குச் சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவின்நாஸ்டாக்கில் இடம் பெற்ற இந்திய நிறுவனம் இன்போசிஸ். தற்போது இவர்கள்இருவருக்கும் உயர்பட்ச இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.

ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகு இந்த முடிவை கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது.புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவை முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா எடுத்துள்ளார்.

பிரேம்ஜியும், நாராயணமூர்த்தியும், சராசரி மனிதர்களைப் போல் எல்லாஇடங்களுக்கும் போய் வருகிறார்கள். அவர்களது இந்த எளிமைகடத்தல்காரர்களுக்கும், தாதாக்களுக்கும் சாதகமாக அமையக் கூடும் என புலனாய்வுஅதிகாரிகள் கருதுகின்றனர்.

இசட் பிரிவு பாதுகாப்பு குறித்து விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள்கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.

பிரேம்ஜி, சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுகையில், பணத்தை மட்டுமேநான் பிரதானமாக எண்ணி எனது பங்குகளை விற்றிருந்தால் எனது பிரபலம்போயிருக்கும் என்றார்.

அவர் எண்ணம் அவ்வாறு இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரில் யாராவதுஒருவர், ராஜ்குமார் போல் கடத்தப்பட்டால் பங்குச் சந்தைகளின் நிலை என்னவாகும்என போலீஸ் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+