காட்டில் பூச்சிக் கடியால் அவஸ்தைப்பட்ட ராஜ்குமார்
பெங்களூர்:
பிணைக்கைதியாக காட்டில் இருந்த போது நடிகர் ராஜ்குமாரை ஆயிரம் முறைக்கும்மேலாக பூச்சிகள் கடித்துள்ளதால் அவரது எடை நான்கறை கிலோ குறைந்துள்ளதாகராஜ்குமாரின் குடும்ப மருத்துவர் ரமண ராவ் தெரிவித்துள்ளார்.
சந்தனக் கடத்ல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் 108நாட்கள் காட்டில் பிணைக் கைதியாக இருந்த பின்பு புதன்கிழமை மீட்கப்பட்டார்.காட்டில் இருந்த போது ஆயிரம் முறைக்கும் மேலாக ராஜ்குமாரை காட்டுப் பூச்சிகள்கடித்துள்ளதால் அவரது எடை குறைந்துள்ளதாக அவரை பரிசோத்த டாக்டர் ரமணராவ்கூறினார்
அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ராஜ்குமார் உடல் முழுவதும் பூச்சிகள் கடித்துள்ளன. சூடு காரணமாக கொப்புளங்களும்உள்ளன.ஆனால் தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவரதுஉடல் நிலை நன்றாக உள்ளது.
காட்டில் இருந்த போது மூட்டு வலியால் ராஜ்குமார் பாதிக்கப்பட்டார். இப்போதுஅவரால் கால்களை நன்றாக நீட்டி மடக்க முடிகிறது.
ராஜ்குமார் என்னைப் பார்த்ததும் பாதி சோர்வு நீங்கி விட்டதாக கூறினார். அவருக்குபூரண ஓய்வு தேவை. அவர் மருத்துவமனையில் தங்கி ஓயவெடுக்க வேண்டுமாஅல்லது வீட்டில் ஓய்வெடுக்க வேண்டுமா என்பது குறித்து விரைவில்முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.
கண் பரிசோதனை:
மேலும் ராஜ்குமாருகக்கு வெள்ளிக்கிழமையன்று மாலை கண் பரிசோதநையும்தனியார் மருத்துவமனையில் நடை பெற்றது. பரிசோதனைக்கு ராஜ்குமாருடன் அவரதுமனைவி பர்வதம்மா, மகன் ராகவேந்திராவும் உடன் வந்திருந்தனர்.