மல்லேஸ்வரிக்கு வீட்டுமனை அளிக்க ஹரியானா அரசு திட்டம்
சண்டிகார்:
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு ஹரியான அரசு குடியிருப்பு வீட்டுமனை வழங்குகிறது.
சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரே ஒரு பதக்கம்தான் வென்றது. அந்த வெண்கலப் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தவர்மல்லேஸ்வரி. அவருக்கு பல பரிசுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
முன்னரே ஹரியானா முதல்வர் ஓம் பிராகஷ் சுவுதாாலா ரூ 25 லட்சம் பரிசளித்துள்ளார். இப்போது அவர் மல்லேஸ்வரிக்கு 1,500 சதுர அடி வீட்டு மனைபரிசளிக்க இருக்கிறார்.
யமுனா நதர் அல்லது ஜகதாரி பகுதியில் இந்த குடியிருப்பு மனை ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த மாதம் 26-ம் தேதி பானிபட்டில் நடக்கவிருக்கும் 14-வதுமகளிர் விளையாட்டு நிகழ்ச்சியில் சவுதாலா இந்த பரிசை வழங்குகிறார்.
எட்டாவது ஜூனியர் அதலெடிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சோனிப் பேட்டையைச் சேரந்த சீமா ஆன்டிலுக்கு ரூ 1 லட்சம் வழங்கப்படஇருக்கிறது.
இந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.