மாலத்தீவு சிறையில் தமிழக மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் அருகிலுள்ள தூத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அந்தோணி அடிமை. இவருக்குச் சொந்தமான படகில் ராஜன், எல்வின், அந்தோணி,சேஷையர், உள்பட 8 மீனவர்கள் கடந்த 12 ம் தேதி கேரள மாநிலம் விழிஞம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது மாலத்தீவைச் சேர்ந்த கடற்படையினர் அவர்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்கள்அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications