மே. இ.தீவுகள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மீது சோபர்ஸ் கடும் கோபம்
மெல்போர்ன்:
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு, பயிற்சிஅளிப்பதற்கான தகுதியே கிடையாது என்று புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரும், முன்னாள்கேப்டனுமான சர் கர்பீல்ட் சோபர்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகைகளுக்கு சோபர்ஸ் அளித்த பேட்டி:
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு புதிதாக ரோஜர் ஹார்பர், ஜெப் துஜான் ஆகியோர்பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களால் கேப்டன் பிரையன்லாராவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
இந்த இரண்டு பேரும் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக இருப்பார்கள்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தைத் தருகிறது. டெஸ்ட் போட்டிகளில்இருவருக்கும் நல்ல அனுபவம் கிடையாது. இவர்கள் பயிற்சி அளித்து அணி தேறுமாஎன்று தெரியவில்லை.
ஹார்பரால் முறையாக பயிற்சி அளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.ஹார்பர் போன்றவர்களால் அணிக்கு நல்ல நம்பிக்கையைத் தர முடியும் என்று கூறமுடியாது.
பயிற்சியாளர்கள் என்று ஏதோ சான்றிதழ்களை வைத்துக் கொண்டு பயிற்சியாளர்களகஇவர்கள் வந்து விட்டார்கள். எனக்கு அப்படிப்பட்ட சான்றிதழ்கள் தேவையில்லை.இப்படித்தான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று யாரும் எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கடுமையாக கூறியுள்ளார் சோபர்ஸ்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹார்பரும், துஜான்உதவி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தலைமையில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில்தொடரை இழந்தது மே.இ. தீவுகள் அணி. தற்போது ஆஸ்திரேலியாவில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.