ஒவ்வொரு ஜாதிக்கும் சங்கம் தேவை.. மதுரை ஆதீனம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
ஜாதியை ஒழிக்க யாராலும் முடியாது. ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் சங்கம் அமைக்கவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் எழுதிய புத்தக வெளியீட்டுவிழா காரைக்குடியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு புத்தகத்தை மதுரை ஆதீனம்வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், ஜாதிகளை ஒழிப்பது இயலாத காரியம்.யாராலும் அது முடியாது.
ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் சங்கம் துவங்க வேண்டும். மாவட்டம் தோறும்ஒவ்வொரு ஜாதிக்கும் தொழிற்சாலை இருக்க வேண்டும். அங்கு அந்த ஜாதிக்காரர்கள்மட்டுமே பணியில் சேர்க்கப்பட வேண்டும். இதற்காக தங்களது ஜாதிக்காரர்களிடம்இவர்கள் நிதி வசூலிக்கலாம்.
இப்படிச் செய்தால் அரசிடம் வேலையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கத்தேவையில்லை என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications