ராமேஸ்வரத்திலிருந்து 10 அமெரிக்கர்கள் வெளியேற்றம்
மதுரை:
ராமேஸ்வரத்தில், விசாக் காலம் முடிந்தும் கூட சட்டத்திற்குப் புறம்பாக குடியிருந்து வந்த அமெரிக்கர்கள்ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ராமேஸ்வரம் மெய்யம்புலி கிராமத்திற்கு அருகில் உள்ள தொண்டு நிறுவனமான தேவ சபையில் அமெரிக்காவைச்சேர்ந்த 10 பேர் தங்கியிருந்தனர். சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் ஆறுமாத காலமாகியும் தொடர்ந்துஇந்தியாவில் தங்குவதற்கான விசாவை புது பிக்கவில்லை.
இதனால் இந்த பத்து பேரையும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் உத்திரவிட்டது.அதன் அடிப்படையில் ஞாயிற்றுக் கிழமை 10 பேரும் தேவசபையில் இருந்து வெளியேறினார்கள்.
அவர்களில் ஒருவரான மைக்கேல் ஜோசப் கூறுகையில், அரசின் உத்தரவை ஏற்று நாங்கள் வெளியேறுகிறோம்.அமெரிக்காவுக்கு செல்லும் நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வருவோம் என்றார்.












Click it and Unblock the Notifications