இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகிறது
ஜெருசலேம் :
இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்குமிடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் கடும் சண்டை மூண்டது.
யூதர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர்இறந்தனர். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனிய நகரான காஸா நகர் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது.
செவ்வாய்க்கிழமையும்இத்தாக்குதல் தொடர்ந்தது.இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கிடையே மீண்டும் சண்டைஆரம்பமானது. மேற்கு கரையின் ரமல்லா மற்றும் ஹெப்ரான் பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 245 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கூறுகையில், காசா பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒருஆணும், பெண்ணும் கொல்லப்பட்டனர். 4 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஏவுகணைத்தாக்குதலைத் தொடங்கியது என்றனர்.
அமெரிக்கா கண்டனம்:
பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் க்ரெளலே கூறுகையில் பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் தாக்கப்பட்டது தீவிரவாதச் செயலாகும்என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகனைத் தாக்குதலில் கடற்படை அலுவலகங்கள், சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை கட்டிடங்கள்,போலீஸ் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்தன.
5 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் பாலஸ்தீன பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தகவல் தொடர்பு மையம் ஆகியவற்றை இஸ்ரேல் ராணுவவீரர்கள் தாக்கியதாகவும், இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. யாசர் அராபத்தின் கட்சித் தலைமையகம் மீதும் தாக்குதல் நடந்தது.
-
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications