தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா, மியான்மர் ஒப்பந்தம்
டெல்லி:
இந்தியாவும், மியான்மரும் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் செயல் பட்டு வரும்தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய, மியான்மர் இடையிலான 1.643 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியில்,செயல்பட்டு வரும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள்ை தவிர்ப்பதன் மூலம் இருநாட்டுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் பலப்படும்
இதைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளும், தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகபாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளன.
மியான்மர் ராணுவத்தில் இரண்டாவது தலைமைப் பதவியை வகிப்பவரும், மியான்மர்ஆளும் கட்சியின் துணைத் தலைவருமான ஜெனரல் மாயுங் அயீ ஒரு வார பயணமாகஇந்தியா வந்திருந்தார்
அப்போது அவருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிற்கும்இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்தியஎல்லையைக் கடந்து ஊடுறுவும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மியான்மர் அக்கறைகாட்டுவதை பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளைபலப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது என்றும் ஜஸ்வந்த் சிங் தெரிவித்ததாகஅவர் கூறினார்.
ஜஸ்வந்த் சிங்கும், அயீயும் இரு நாடுகளுக்கு இடையேயான தரை வழிப்பாதையைபலப்படுததுவது குறித்த கட்டுமானப் பணிகளை எவ்வாறு சீரமைப்பது என்பதுகுறித்தும் விவாதித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications