சீன சுரங்க வெடிவிபத்தில் 16 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்துஏற்பட்டதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு யூனான் மாகாணத்தில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்தவியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த 16 பேருடைய உடல்களும் அடுத்த நாள் அப்புறப்படுத்தப்பட்டன. வெடிவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
சீனாவில் ஆண்டுதோறும், 10,000 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்க விபத்தில்இறக்கின்றனர் என்று அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதிக வேலைப் பளு,பாதுகாப்பு குறைவு போன்றவையே இந்த விபத்துக்களுக்குக் காரணம். கடந்தசெப்டம்பர் 27-ம் தேதி, குய்ஸோ என்ற இடத்தில், நடந்த சுரங்க வெடிவிபத்தில், 162தொழிலாளர்கள் இறந்தனர்.
சீனாவில் அங்கீகாரம் பெறாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications