ஈரோட்டில் ஒரு வித்தியாசமான கொள்ளை
ஈரோடு:
ஈரோட்டில் வித்தியாசமான முறையில், ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு பகுதிகளில் தற்போது வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கும்முயற்சிகள் "வெற்றிகரமாக நடந்து வருகின்றன. இந்தக் கொள்ளை முயற்சியில்பல்வேறு யுக்திகளைக் கொள்ளையர்கள் பயன்படுத்துவதால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மனைவி ரங்கநாயகி.பச்சியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது மகன் கார்த்திக்மற்றும் மருமகள் ரங்கநாயகி ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலையில் ஒரு கும்பல், பச்சியப்பனின் வீட்டிற்குள் ஜன்னல்வழியாகச் செல்ல முயற்சி மேற்கொண்டது. ஜன்னல் கம்பிகளை அறுத்து அதில் ஒருசிறுவனை முதலில் அனுப்பினர். அந்த சிறுவன் உள்ளே சென்று உள்புறமாக இருந்ததாழ்ப்பாளைத் திறந்தான்.
பின்னர், வெளியில் நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்தது.சிறுவன் வெளியேறியவுடன், அறையில் இருந்த நான்கு பேரையும் கயிற்றினால் கட்டிப்போட்டனர். பின்னர், அவர்களை மிரட்டி, ரங்கநாயகியின் கழுத்தில் இருந்த 25 பவுன்நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை, ரூ. 20,000 ரொக்கம்ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
இந்த வித்தியாசமான கொள்ளை குறித்து போலீசில் பச்சியப்பன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே போன்று ஜன்னல் வழியாக நுழைந்து ஜவுளிவியாபாரியின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications