ஒரே நாளில் சாவைச் சந்தித்த பெண் சிசு
ஈரோடு:
ஈரோட்டில் திங்கள்கிழமை பெண் சிசுக் கொலை நடந்துள்ளது. பிறந்து ஒரு நாளே ஆன ஒரு பெண் சிசுவைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச்சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் சிசுக்கள் கொல்லப்படுவது அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. தற்போது இந்த அவலம் ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் திங்களன்று காலையில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று இறந்து கிடப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
குப்பைத் தொட்டியில் இருந்த இந்த பெண் சிசு மதியம் 12 மணி வரை அகற்றப்படமலேயே இருந்தது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து சிசுவைப் பார்வையிட்டனர்.
பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications