கைதிகளின் அறையிலிருந்து பயங்கர பொருட்கள் பறிமுதல்
கோவை:
கோவை மத்திய சிறையில் அல் உம்மா தீவிரவாதிகளின் அறைகளில் சமயலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமண்ணெண்ணெய் உட்பட காய்கறி மற்றும் சிகரெட் லைட்டர்கள் ஆகியவற்றைப் போலீசார் திடீர் சோதனை நடத்திக்கைப்பற்றினர்.
சென்னையில் நடந்த சிறைக் கலவரத்திற்குப் பின் தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 168 அல் உம்மாகைதிகள்அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிளேட்டுகளால் செய்யப்பட்டகத்திகளைப் போலீசார் கைப்பற்றினர். இதனால் அடிக்கடி கோவை சிறையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும்திங்களன்று நடந்த சோதனையில் சிறையில் அல் உம்மா தீவிரவாதிகள் சமையலுக்குப் பயன்படுத்தி வந்த நான்குமண்ணெண்ணெய் ஸ்டவ்கள், மண்ணெண்ணெய் பாக்கெட்டுகள், கிரிக்கெட் மட்டைகள், உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக்கைப்பற்றினர்.
மேலும் உடற்பயிற்சிக்காக கான்க்ரீட் தூணைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கர்லாக் கட்டைகள் பிளாஸ்டிக் பேப்பர்களால் ஆனகூடைப் பந்து, புட்பால், ரேசர் பிளேடுகள், கயிறு ஆகியவை உள்ளிட்ட ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அதிகாலையில் துவங்கிய இந்த அதிரடி சோதனை காலை 9 மணி வரை நீடித்தது. சிறை விதி முறைகளை மீறி எப்படி இந்தப்பொருட்கள் வந்தன என்பது குறித்து போலீசாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு மிக்க சிறைக்குள்ளேயே பொருட்கள் வந்த விதம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.