வீரப்பனைச் சந்தித்த தூதர் தி.க.விலிருந்து விலகினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க பழ. நெடுமாறனுடன் காட்டுக்குச் சென்ற மேட்டூர்நகர திராவிடர் கழக செயலாளர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்திலிருந்து விலகிவிட்டார்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.வீரமணியின் உத்தரவையடுத்து அவர்அமைப்பிலிருந்து விலகி விட்டார்.

இதுதொடர்பாக வீரமணி வெளியிட்ட அறிக்கை: காட்டுக்குள் போக வேண்டாம்என்று நான் பிறப்பித்த உத்தரவையும் மீறி கொளத்தூர் மணி காட்டுக்குப் போனதால்,அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.இதையடுத்து தனது பதவியை மணி ராஜினாமா செய்து விட்டார். அமைப்பிலிருந்தும்விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நெடுமாறனுடன் காட்டுக்குப் போகப் போவதாக கொளத்தூர் மணி என்னிடம்தெரிவித்திருந்தார்.ஆனால் வீரப்பனுக்கும், விடுதலைப் புலிகள் மற்றும் சிலதீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி அதற்கு அனுமதி மறுத்தேன்.

ஆனால் எனது மறுப்பையும் மீறி, மணி, காட்டுக்குப் போனார். இது திராவிடர்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை மீறிய செயலாகும்.

இதையடுத்து தனது விலகல் கடிதத்தை கொளத்தூர் மணி கொடுத்துள்ளார் என்றுவீரமணி தெரிவித்திருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+