அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்தது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. அதில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தனர்.

இலங்கை தாவுப்பாடு என்ற இடத்தில் 8 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு ராமேஸ்வரம் புறப்பட்டது. அதில் இருந்த அகதிகள் மன்னார்மாவட்டம் சின்னக்கடை, முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

படகில் சேகர், அவரது மனைவி கலா, அவர்களது 7 மாத கைக்குழந்தை சிந்துசன் மற்றும் நாகராஜன், சிவகணபதி, வீராசாமி, சிவரூபன், தில்லைசெல்விஆகியோர் இருந்தனர். படகை 2 பேர் ஓட்டி வந்தனர்.

அந்தப் படகு தனுஷ்கோடி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ராட்சச அலையை சமாளிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனால் படகில்இருந்தவர்கள் கரையேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். படகு ஓட்டி வந்த 2 பேரும் கவிழந்த படகை நிமிர்த்தி சரி செய்தனர்.

உயிர்தப்பிய அகதிகள் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள கம்பிபாடு என்ற இடத்தில் வந்து இறங்கினார்கள். படகு கரை சேர்ந்ததும் அதனை ஓட்டிவந்த 2 பேரும் படகை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அகதிகளை தனுஷ்கோடி எஸ்.ஐ.மாரியப்பன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மண்டபம்முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+