For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்தது

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. அதில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தனர்.

இலங்கை தாவுப்பாடு என்ற இடத்தில் 8 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு ராமேஸ்வரம் புறப்பட்டது. அதில் இருந்த அகதிகள் மன்னார்மாவட்டம் சின்னக்கடை, முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

படகில் சேகர், அவரது மனைவி கலா, அவர்களது 7 மாத கைக்குழந்தை சிந்துசன் மற்றும் நாகராஜன், சிவகணபதி, வீராசாமி, சிவரூபன், தில்லைசெல்விஆகியோர் இருந்தனர். படகை 2 பேர் ஓட்டி வந்தனர்.

அந்தப் படகு தனுஷ்கோடி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ராட்சச அலையை சமாளிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனால் படகில்இருந்தவர்கள் கரையேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். படகு ஓட்டி வந்த 2 பேரும் கவிழந்த படகை நிமிர்த்தி சரி செய்தனர்.

உயிர்தப்பிய அகதிகள் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள கம்பிபாடு என்ற இடத்தில் வந்து இறங்கினார்கள். படகு கரை சேர்ந்ததும் அதனை ஓட்டிவந்த 2 பேரும் படகை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அகதிகளை தனுஷ்கோடி எஸ்.ஐ.மாரியப்பன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மண்டபம்முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X