கர்நாடக அதிரடிப்படையில் மீண்டும் சங்கர் பித்ரி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக அதிரடிப்படையின் பலம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் சங்கர் பித்ரி மீண்டும் அதிரடிப்படைக்குஅழைக்கப்பட்டுள்ளார். இவருடன் டி.ஐ.ஜி. கெம்பையாவும் அதிரடிப்படையில்சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர, தற்போதைய அதிரடிப்படைத் தலைவர் ஹர்ஷவர்த்தனராஜு அப்படியே நீடிக்கிறார்.
சாங்க்லியானா தலைமையில் இவர்கள் செயல்படுவார்கள். தமிழக அதிரடிப்படையில்கூடுதலாக பல அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அதே போல கர்நாடகத் தரப்பிலும்கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சங்கர் பித்ரி முன்பு அதிரடிப்படைத் தலைவராக இருந்தபோது, வீரப்பன் நடவடிக்கைஓரளவு குறைய முக்கியக் காரணமாக இருந்தார். வீரப்பனின் பலத்தைக்குறைத்தவர்களில் முக்கியமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications