லஞ்சப் பேயை விரட்ட ஒரு போராட்டம்
தென்காசி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிரசவம் பார்ப்பதற்காக அரசு பெண் டாக்டர் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் நூதனப்போராட்டத்தில் குதித்துள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி தனலட்சுமி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.
இதனால் தனலட்சுமி அம்பாசமுத்திரத்தை விட்டு தென்காசிக்குக் குடியேறினார். நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுதென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் உலகம்மாள் சிகிச்சை அளித்தார். நல்ல முறையில் பிரசவம் பார்க்க வேண்டுமானால்ரூ 5 ஆயிரம் தர வேண்டும் என்று டாக்டர் உலகம்மாள், தனலட்சுமியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கணவனை இழந்த தனலட்சுமியால் பணம் தர முடியவில்லை. இதனால் பிரசவம் பார்க்க வேண்டாம் என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டார். ஊரைகூட்டி நடந்ததைச் சொன்னார். இதையடுத்து ஊர்க்காரர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அவர்கள் கையில் வேப்பிலையுடன் லஞ்சப் பேயைவிரட்டியடிப்போம் என்று கோஷம் போட்டனர். தனலட்சுமிக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.