For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு அருகே 4 பேர் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்மு--காஷ்மீர் மாநிலம் பானிஹால் என்ற இடத்தில், அடையாளம் தெரியாத சிலர்சரமாரியாக சுட்டதில் நான்கு பேர் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்தசம்பவம் நடந்தது. ஷெர் பீபி மற்றும் லெஹார்பூரி ஆகிய இடங்களுக்கு இடையே,ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த நான்கு பஸ்களை துப்பாக்கிமுனையில் சிலர் நிறுத்தினர்.

பின்னர், பஸ்சில் ஏறிக் கொள்ளையடிக்க முயன்றனர். சில பயணிகள் அதற்கு எதிர்ப்புதெரிவிக்கவே, கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இதில்நான்கு பேர் அங்கேயே இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர். பின்னர் அக்கும்பல்தப்பியது.

துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் சாலையோர வழிப்பறிக் கொள்ளையர்களாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X