For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வழக்குகளை விரைவில் முடிக்க ஆர்.எம்.வீ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்குகள்,சி.பி.ஐ. மற்றும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் தொடரப்பட்டுள்ளவழக்குகளின் விசாரணையை விரைவில் முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்றுஎம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மத்திய அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 27-ம் தேதி மாநிலம் முழுவதிலும்மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அமைதியானமுறையில் தர்ணாப் போராட்டம் நடத்தப்படும்.

சி.பி.ஐ, பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் வருமான வரித்துறைஅதிகாரிகள் இதுவரை ஜெயலலிதா தொடர்பான வழக்குகளில் நடத்தியவிசாரணையில், பல கோடி அரசுச் சொத்துக்களை ஜெயலலிதா சுரண்டியிருப்பதுதெரிய வந்துள்ளது. இதுதவிர வெளிநாட்டு பண மோசடியிலும் அவர் ஈடுபட்டிருப்பதுதெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக 24 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் விரைவில் விசாரணை முடிந்து தண்டனைஅளிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எம்.வீரப்பன் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X