அல் கோருக்கு சாதகமாக அமெரிக்க கோர்ட் தீர்ப்பு
வாஷிங்க்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் கையால் எண்ணப்பட்ட வாக்குகளையும், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று புளோரிடா சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோருக்குக் கிடைத்த மிகப் பெரியாக வெற்றியாக கருதப்படுகிறது. அனைத்து ஓட்டுஎண்ணிக்கையும் சரி பார்க்கப்பட்டு நவம்பர் 26 ம் தேதியுடன் அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற முடிவு வெளியிடப்படும்.
புளோரிடா மாநிலத்தில் 25 எலக்டோரல் பிரதிநிதிகள் வாக்குகள் உள்ளன. இந்த மாநிலத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் குறைந்த அளவேவித்தியாசம் இருந்ததால், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் கையால் வாக்குகளை எண்ண உத்தரவிடப்பட்டது.
ஆனால் கையால் வாக்குகளை எண்ணியதை கணக்கில் சேர்க்க முடியாது என்று மாநிலத் தேர்தல் அதிகாரி கேத்தரீன் ஹாரிஸ் கூறி விட்டார். இதையடுத்துஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர் புளோரிடா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அல் கோருக்கு எதிராக டெக்ஸாஸ்மாநில கவர்னரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ஜார்ஜ் புஷ் ஜூனியர் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த 8 பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் 42 பக்கத் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில், தேர்தல் ஆணையரும், அமைச்சருமான கேத்தரின்ஹாரிஸ் கையால் எண்ணப்பட்ட வாக்குகளை, மொத்த வாக்குகள் எண்ணிக்கையுடன் சேர்க்க உத்தரவிட வேண்டும். மக்கள் வாக்களித்த ஓட்டுக்கள்தான்முக்கியம். அதை விட மற்றவை பெரிதல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தத் தீர்ப்பு குறித்து, ஜார்ஜ் புஷ் தரப்பிலிருந்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, புளோரிடா தீர்ப்பைஎதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் புளோரிடா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் அல் கோரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது புஷ் 930 வாக்குகளேஅதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். ஆனால் புளோரிடா மாநிலத்தின் மேலும் 3 கவுன்டிகளில் கையால் வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. அதில் அல் கோருக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கவுன்டிகளில் அல்கோரின் ஜனநாயகக் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இங்கு கையால் வாக்குகளை எண்ணுவதற்கு புஷ் தரப்பு எதிர்ப்புதெரிவித்துள்ளது. இப்படி எண்ணுவது நியாயமல்ல என்று அது கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications