இந்தியர்கள் உள்ளிட்ட 43 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் கைது

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

தெற்கு இங்கிலாந்திலுள்ள கென்ட் துறைமுகத்தில் ஜெர்மன் நாட்டுப் பதிவு எண் கொண்ட டிரக் மூலம், அனுமதியின்றி இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றஇந்தியர்கள் உள்ளிட்ட 43 வெளி நாட்டவர்கள் பிடிபட்டனர்.

அனைவரும் 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள், ஒரு குழந்தை, 11 இளைஞர்கள் மற்றும் 28 பேர் ஆண்கள். அனைவரும் இந்தியா,நேபாளம், செசன்யா, துருக்கி, ஈராக், ஈரான், கோசாவோ மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

போலீஸார் இவர்கள் அனைவரையும் கைது செய்து, டோவர் பகுதியில் உள்ள விசாரணை அலுவலகத்திற்குக் சென்றனர். இவர்கள் வந்த டிரக் ஜெர்மன்நாட்டுப் பதிவு எண் கொண்டது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரக்கை ஓட்டி வந்தவரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரே. 43 பேரும் கைதுசெய்யவில்லை என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், கென்ட் துறைமுகத்தில் டிரக்கில் இறந்த நிலையில், 58 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அவர்கள்அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

இங்கிலாந்து போலீஸார் தங்கள் நாட்டுக்குள் நுழையும் பிற நாட்டு வாகனங்களை சோதனையிடும் பணியைத் தீவிரப் படுத்தியுள்ளனர். குறிப்பாகஅனுமதியில்லாமல் நுழையும் வாகனங்களுக்கு அபாரதத் தொகையை அதிகரித்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+